search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார நிலையம்"

    • நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
    • இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே நாஞ்சி க்கோட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி.கி.வ.சத்தியராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழைக் காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

    நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

    இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    அதற்கு பழனியப்பன் நகரில் இடம் ஒதுக்கி உள்ளோம். நமது ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒத்துழை ப்புடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்று, தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வண்டார்குழலி நிம்மி, சகாயராணி, கல்பனா, வாசுதேவன், தாழம்பட்டி மதியழகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, விஜயரேவதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊத்தங்கரை அருகே புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

            கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புங்கனை மற்றும் அதன் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் நீண்ட நாட்களாக அரசு ஆரம்ப சுகாதார வளாகம் வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் பல முறை ஆர்ப்பாட்டங்கள் செய்தும் அரசுக்கு கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாகவும் இதுவரை இப்பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து புங்கனை கிராம பொதுமக்கள் கூறியதாவது:-

    புங்கனை பகுதியில் வசித்து வரும் நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இங்கு அரசு துணை சுகாதார நிலையம் அமைப்பது இப்பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தற்துபோது தமிழக அரசு புதியதாக துணை சுகாதார நிலையம் ஒன்றினை அமைக்க அரசாணை வெளியிட்டு அதற்கான பணியும் தொடங்கி உள்ளன. இந்த பணியானது புங்கனை பகுதியில் ஆரம்பிக்காமல் அருகே உள்ள மண்ணாடிப்பட்டி கிராமத்தில் போதுமான இடவசதி இல்லாத பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.

    ஆனால், புங்கனை பகுதியில் துணை சுகாதாரம் நிலையம் அமைப்பதற் காகவே சுமார் 41 சென்ட் நிலம் கடந்த 20 ஆண்டு களாக ஒதுக்கப்பட்டு இருப்பதா கவும் அவற்றில் கட்டினால் நிலையத்திற்கு போதுமான இடவசதி இருக்கும். எனவே உடனடியாக மண்ணாடிப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தில் தடுத்து நிறுத்தி புங்கனை பகுதியில் அமைத்திட வேண்டும்.

    அவ்வாறு மாற்றி அமைக்க விட்டால், வருகிற 4-ந் தேதி புதூர் புங்கனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு புங்கனை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • 26 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம் காவனூரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி னார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காவனூர், புங்கனூர், பட்டினம், வரகூர், குப்பம், வெங்கடாபுரம் இன் னும் பல கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.

    வெங்கடாபுரம் போன்ற மலைப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைபெற வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டி உள்ளது.

    தற்போது இந்த மருத்துவ மனை தொடங்கப்பட்டால் அவசரகால சிகிச்சைகள், பிரசவங்கள், விஷ பூச்சி, விஷ பாம்பு கடிகள் போன்ற அவசர சிகிச்சைகளை இப்பகுதி மக்களால் விரைவில் பெற முடியும்.

    பொதுமக்களின் அடிப் படை வசதிகளை நிறை வேற்றி தருவதில் முதல்- அமைச்சர் மிகவும் முக்கியத் துவம் அளிக்கிறார். பெண்கள் சுலபமாக தொழில் தொடங்கிடவும், தன்னிறைவு பெற்று சுய மரியாதையுடன் வாழ்ந்திடவும் அதிகளவில் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தனியார் இடத்தினை விலைக்கு வாங்க நன்கொடை வழங்கிய 26 பேருக்கு அமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

    இப்பணிக்காக முதன் முதலில் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு ரூ.1 லட்சம் வழங்கினார். அதன் பிறகு ஆற்காடு எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜெ.எல்.ஈஸ்வரப் பன் எம்.எல்.ஏ., சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் கிரிஜா, பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொ றியாளர் திரிபுர சுந்தரி, வட் டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார், ஆர் சேட்டு, பி. வடமலை, எஸ் ஆறுமுகம், பி.பொன்னரசன் பி.மகேந்திரன், கே.ஆர்.சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 6.3 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டிடம்
    • நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொது காதாரத்துறையின் கீழ் உள்ள விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மகப்பேறு மருத்துவம், கண் சிகிச்சை, பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், தொழுநோய் பிரிவு, காசநோய் பிரிவு, முதியோர் பிரிவு, குடும்ப கட்டுப்பாடு, ஆரோக்கியமான இளம்பருவகால ஆலோசனை, மாரடைப்பு, பக்கவாதம், மகப்பேறு, தீக்காயம், நாய்க்கடி, பாம்புக்கடி, தேள் கடி, விஷம் அருந்துதல், தொடுதல், சுவாசித்தல், வலிப்பு நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ரூ.6.3 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டிடத்தினை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டதோடு, உள்நோயாளிகளாக சிசிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் வெளியில் உட்காரும் விதமாக தற்காலிக கூடாரம் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கலெக்டர் ஸ்ரீதர், இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை பணியாளர் வருகை பதிவேடு, பணி பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடு குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டர் மீனாட்சி, உதவி செயற்பொறியாளர், பேரூராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்
    • கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நோட்டீஸ் ஒட்ட வேண்டும்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் காப்பிணிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவரிடம் கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்.

    கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என தாய்மார்களுக்கு தெரியும் வகையில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகளிடம், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின் போது அரசு டாக்டர்கள் இனியா, வித்தியா மற்றும் சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தொண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக மாற்றப்படுமா?
    • வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியாகவும் வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது.

    இங்கு உள்ள மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தக் ேகாரி, தமிழக அரசின் சுகாதாரத்துறை வழங்கிய அனைத்து ஆவணங்களுடன் மனித நேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதை நீதிபதிகள் வைத்தியநாதன், பரத் சக்கர வர்த்தி ஆகியோர் முன்பு டிவிஷன் பெஞ்சில் விசா ரணை நடந்தது. தொண்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

    மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.அரசு மருத்துவமனையை நம்பியுள்ள தொண்டி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள ஏராளமான கிராம மக்கள் சுகாதார தேவையை அரசு நிறைவேற்றுமா? மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பொது மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்படுமா? என இப்பகுதி பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • சோழவந்தான் அருகே அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
    • இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் காடுபட்டி, புதுப்பட்டி, வடகாடுபட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் காடுபட்டி கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதை அமைச்சர் மூர்த்தி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    மருத்துவர் அருண்கோபி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் வரவேற்றார். கச்சகட்டி வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், பிரபாகரன், ராமகிருஷ்ணன், சதீஷ், கிராம செவிலியர் உஷா செல்வமணி, மக்களை தேடி மருத்துவ பணியாளர் மலர்விழி மற்றும் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பல ர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் நன்றி கூறினார்.

    • ரூ.6¼ கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டது.
    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி திறந்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் புதிதாக ரூ. 6 கோடியே 34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 14 ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், மூர்த்தி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள குழந்தைகள் நல மையத்திற்கான பூமி பூஜை விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர் பேசுகையில், மக்கள் நலத்திட்டங் களுக்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லினை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளி நாட்டினரும் பாராட்டு கிறார்கள்.

    மதுரையில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர், பாதாள சாக்கடை, மின் விளக்கு வசதி செய்து தரப்படும். தி.மு.க. ஆட்சியில் ஏழை பெண் குழந்தைகள் கல்லூரி படிக்கும்போது மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்ப டுத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-

    மதுரை தோப்பூரில் 5 ஏக்கரில் ஓமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரி விரைவில் வர உள்ளது. இதற்காக ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை பார்த்தால் 2028-ம் ஆண்டு தான் வரும் என தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க மத்திய அரசு கவனம் செலுத்த வில்லை. ஆனால் தமிழக அரசு பணிகளை தொடங்கி வருடத்திற்கு 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படிக்க வசதிகள் செய்யப் பட்டுள்ளன. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின் 45 புதிய மருத்துவ மனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, எம்.பி.வெங்கடேசன், மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன்,மண்டலத் தலைவர்கள் வாசுகிசசி குமார், சுவிதா விமல், முகேஷ் சர்மா,மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, திமுக நிர்வாகிகள் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன், சோமசுந்தர பாண்டியன், மருதுபாண்டி, சசிகுமார், நேருபாண்டி, வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 110 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நாகப்பட்டினம் தொகுதியில் புதிய கட்டடம் வேண்டுமென்று அமைச்சரிடம் மனு அளித்திருந்தேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாகப்பட்டினம் தொகுதி திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கணபதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா என்று கேள்வி எழுப்பியி ருந்தேன். அதற்கு பதிலளித்த, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.

    அதன்படி, இரண்டே மாதங்களில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருக்கண்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 120 லட்சமும், திருப்பயத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 120 லட்சமும், கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 110 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் வேண்டுமென்று ஏற்கெனவே அமைச்சரிடம் மனு அளித்திருந்தேன். அதன்படி ஆழியூர் துணை சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 35 லட்சமும், பெரியக ண்ணமங்கலம் துணை சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 35 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுகாதார நிலையம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
    • வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    மனிதநேய மக்கள் கட்சியின் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அஞ்சுகோட்டை அரசு துணை சுகாதார நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த துணை சுகாதார நிலையத்தில் தங்கி பணிபுரியும் வகையில் கிராம சுகாதார செவிலியர் ஒருவரும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு செவிலியரும் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த துணை சுகாதார நிலைய எல்கைக்குள் உள்ள அஞ்சுகோட்டை, மேலக்கோட்டை, பொட்டக்கோட்டை, கரையக்கோட்டை, வாணியேந்தல், செங்கமடை, அழகமடை, குஞ்சங்குளம், வெளியங்குடி உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சளி, காய்ச்சல், விஷ வண்டுகள், பாம்புகள் கடித்தல் உள்ளிட்ட நோய்களுக்காக இங்கு வரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவருக்கும் முதலுதவி சிகிச்சையும், அந்த பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்சமயம் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு பணியில் உள்ள 2 செவிலி யர்களும் இந்த துணை சுகாதார நிலையத்திற்குள் வர அச்சப்படுகின்றனர். எனவே அந்த கட்டிடம் பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. மேலும் கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் பருவ மழை காலங்களில் அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இந்த கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கி பழுதானதால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து கீழே விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அப்பகுதி மக்கள் விபத்து மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள திருவாடானை மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. போர்க்கால நடவடிக்கை யாக அஞ்சுகோட்டை துணை சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நோயாளிகளின் சிகிச்சை பெற வரும் சுகாதார நிலையம், பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு வக்கீல் வஞ்சிக்கோட்டை, துணை சுகாதார நிலைய கட்டிடம் விரைவில் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    விசாரணை முடிவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தது குறித்து அரசு தரப்பில் வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தேனீக்கள் கடி மற்றும் பாம்பு கடிக்கான சிகிச்சைக்காக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைகின்றனர்.
    • வத்தல் மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முழுமையாக பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கொண்டகரஹள்ளி ஊராட்சியில் வத்தல் மலை அமைந்துள்ளது. இங்கு ஒன்றியங்காடு, பால்சிலம்பு, நாயக்கனூர், பெரியூர் உள்ளிட்ட 10 மலை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்கள் முழுமையாக மலைகளை ஒட்டிய பகுதியாக உள்ளது. இங்கு வத்தல்மலை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனையின் விழிப்புணர்வு மற்றும் தொடர் தரமான சிகிச்சையின் காரணமாக மலை கிராமங்களில் உள்ளவர்கள் வீட்டில் பிரசவம் பார்த்தல் என்பதை முழுமையாக மறந்து தற்போது அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மகப்பேறு சிகிச்சைக்காக முழுமையாக நம்பி வருகின்றனர். அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதால் எந்த நேரத்திலும் சிகிச்சைக்கு மக்கள் செல்கின்றனர்.

    சுகப்பிரசவ மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்டவை வத்தல் மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முழுமையாக பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனையும் தாண்டி சில அவசர சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட வற்றிற்க்கு மட்டும் வத்தல் மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    வத்தல் மலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக அளவில் தேனீக்கள் கடி மற்றும் பாம்பு கடிக்கான சிகிச்சைக்காக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைகின்றனர் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    மேலும் கொரோனா பேரிடர் காலங்களில் கொரோனா தடுப்பூசி அனைத்து பொதுமக்களும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை மருத்துவ பணியா ளர்கள் தொடர் விழிப்புணர்வு ஏற்படு த்தினர். இதன் காரணமாக கொரோனோ தடுப்பூசி இப்பகுதியில் 100 சதவீதம் செலுத்த ப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிட த்தக்கது.

    • எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகளும் எதுவும் இல்லை
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து தரம் உயர்த்துவதற்கான பணிகள்

    கன்னியாகுமரி;

    கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் எதுவும் இல்லாமல் ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.பாதி நேரம் மட்டுமே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகளும் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் இப்பகுதியில் மக்கள் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபனிடம் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையின் அடிப்படையில் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன், கவுன்சிலர் நீரோடி ஸ்டீபன் மற்றும் ஜெயசிங் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழு நேர ஆஸ்பத்திரியாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். தற்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து தரம் உயர்த்துவதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று கடிதம் மூலம் அரசுத்துறை கூறியுள்ளது.

    ×